இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – சிக்கல்

சஷ்டி விழாவின் 5 ம் நாள்.

சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் என்பது வழக்கு.

வசிஷ்டர் வெண்ணையால் பிரதிஷ்டை செய்த லிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டதால், இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்ததாகக் கூறப் படுகிறது. நவநீத (வெண்ணெய்) ஈஸ்வரன் என்றும் வேல் நெடுங்கன்னி என்றும் அம்மையப்பனைக் கொண்ட அழகுக் குமரன் இங்கு சிங்காரவேலன் என்று அழைக்கப் படுகிறான். சூரனை ஸம்ஹாரம் செய்வதற்காக, அன்னை தன் சக்தியை வேல் வடிவில் வழங்கியதால், வேல் நெடுங்கன்னி எனவும், அதை வாங்கிய முருகன் சிங்காரவேலன் எனவும் அழைக்கப் படுகின்றனர்.

தாய் தந்தை இருவருக்கும் இடையில் அமர்ந்திருக்கும் கோலத்தில் தரிசனம் செய்யும்போது “முருகனை வணங்க வந்து மூவரையும் வழிபடும் பாக்யம் ” கிடைக்கும்.

இன்றைய நாளின் பெருமைக்குரிய சிக்கல் சிங்கார வேலனை, வணங்குவோம்.

Leave a Comment