இன்று கந்த சஷ்டி. மாலை சூர ஸம்ஹாரம்.
தலையலையில் செந்தூர் தரிசனம்.
மனித நம்பிக்கையின் உச்சம் பக்தி.
ஆறுமுகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி, குமரன் இருக்கும் அனைத்து இடங்களிலும் கோலாகலம்.
நாம் கேட்பதெல்லாம் அளிப்பதோடு, அவன் கருணை உள்ளத்துடன் நமக்குத் தெரியாத நம் தேவைகளையும் பூர்த்தி செய்வான்
நாமும் இருக்கும் இடத்திலேயே அரோகரா கோஷம் எழுப்பி அவன்தாள் பணிவோம்.
மலைக்குற மகளை மணந்த
அலைகடல் அருகன்
சிலையெனை மட்டுமே இல்லாது
விலையிலா வரமளித்து வாழ்த்திடுவான்!