கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உகந்தது
அக்னி ஸ்வரூபத்தில் அண்ணாமலையான சிவனுக்கு உகந்தது!
அர்த நாரியாய் அண்ணலுடன் கலந்த அன்னைக்கு உகந்தது
இம்மூவருக்கும் உகந்தது என்றால், முழு முதற்கடவுள் முந்தி விநாயகனுக்கும் உகந்ததுதானே!
இத்தகைய இனிய திருநாளில் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !
மாந்தளிர் அழகுடன் மாணிக்க ஒளியுடன்
பூந்துகில் உடையுடுத்தி பூதங்களுள் ஒன்றான
வேந்தன் என்றாகிநல் வேதங்கள் முழங்கிட
சாந்தம் நிறைபுவியாக்கி சரித்திரம் படைத்திடுவோம்