இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – காலடி தரிசனம்

மஹான் ஆதி சங்கரர் அவதரித்த புண்ணிய பூமியான, காலடிக்கு வரும் பாக்கியம் இன்று கிட்டியுள்ளது. எங்கள் பெரியப்பா மகனுக்கு, அங்கு சிருங்கேரி மடத்தில் வைத்து, பீமரத சாந்தி இன்றும் நாளையும் நடக்கிறது. மிகவும் அருமையான நொடிகளாக அனுபவிக்க முடிகிறது. மிகவும்
ரம்யமான சூழ்நிலை. வணிக ரீதியில் இல்லாமல், ஆத்மார்த்தமாக செய்து கொடுக்கிறார்கள். சங்கரருடைய,
எத்தனையோ பாடல்களும், ஸ்லோகங்களும் இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த நிர்வாண ஷதகமும், மாத்ரு பஞ்சகமும், அவருடைய சன்னதியில் படித்து ஆனந்தம் அடைந்த கணம், விவரிக்க முடியாத நிலையைத் தந்தது. வழக்கம் போல அனைவர் நலன் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டேன். இதைப் பகிர்வதன் மூலம், நீங்களும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

Leave a Comment