இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – பாரதி பிறந்தநாள்!

நாமகள் அருளாலே நயமான சொல்லெடுத்துப்
பாமாலை பலவியற்றி பலராலும் பாடிமகிழ்
பூவுக்குள் தேனாகப் புவியுளோர் அருந்தியே
கோமகனைக் கொண்டாடவோர் குதூகலத் திருநாள்!

நரிபோல நுழைந்து நம்நாட்டை ஆண்டவனைப்
பரிவேக முழக்கப் பாடல்களால் பலரோடும்
அரிபோல் முழங்கியே அதிர்வடையச் செய்தவன்
கரிமூலம் காலனின் கணக்குக்கு இரையானவன்!

கண்ணனைக் கொண்டாடிய கண்ணம்மாவின் காதலன்
அண்ணலுக்குக்கும் அதிகார அழைப்பு விடுத்தவன்
தண்ணிலவுக் கதிராகித் தகைசால் தரணியுளோர்
எண்ணத்தில் இமயமென என்றென்றும் உயர்ந்தவன்!

மெல்லத் தமிழினிச் சாகும் என்றவனை
வில்லடிபோல வீரம்புகளால் விரட்டும் வித்தையால்
சொல்லடி கொடுத்துச் சோர்வுறச் செய்தவன்
பல்லுயிரும் போற்றியே வணங்கும் பாரதி….
நீ என்றும் எங்கள் பாரதத் தீ!🔥

Leave a Comment